Saturday 31 March 2012

கலிகாலம்


















































(அன்பு வாசகர்களே, சாரி இன்று பதிவு ஒன்றும் கிடையாது).

Thursday 29 March 2012

திண்ணைப் பேச்சு-3

               பெயரிலொன்றும் பெரிய பெருமை இல்லை என்று பெரியவர்கள் சொன்னாலும் நீயா நானா நிகழ்ச்சியில் பெயர் சரியாக அமையாமல் நொந்த கதையைப் பலர் சொன்னார்கள்.  பெண்களுக்குப் புகழேந்தி என்று ஆண்கள் பெயரும் ஆண்களுக்குக் கல்யாணி, கண்மணி என்று பெண்கள் பெயரும் வைக்கப்படுவது கேட்டு ஆச்சர்யமாக இருந்தது.  அதிலும் ஒருவர் இப்படி பெண் பெயர் வைத்ததால் மற்றவர்களின் ஏளனத்துக்கு ஆளானது குறித்து அழாத குறையாகக் கூறிய போது வருத்தமாக இருந்தது.  ஆனால் அந்த விஷயத்தைக் கூட நகைச்சுவையாக எடுத்துக் கொண்ட அன்னக்கொடி என்ற பெயருடைய ஒருவர் பேசியது என்னை மிகவும் கவர்ந்தது. அவர் கடன் வசூல் செய்யும் வேலையில் சேர்ந்தாராம். அவருடைய பாஸ் அவரைத் தன்னிடம் கடன் வாங்கியவர் வீட்டிலெல்லாம் அறிமுகம் செய்து இவர்தான் இனிமேல் வசூல் செய்ய வருவார் என்றாராம்.  அன்னக்கொடி என்ற அவரின் பெயரைச் சரியாகப் புரிந்து கொள்ளாத ஒருவர் "ஏய், அன்னக்காவடி வந்திருக்கார் பாரு, வட்டிக் காசை எடுத்து வா" என்றாராம். தன் பெயர் இப்படி இருகிறதே என்று வெட்கி வேதனைப் படாமல் "எங்கள் காலேஜில் நடந்த எலக்ஷனில் 'பாவாடை' என்ற பெயருடையவர் போட்டி போட்டார். அவரே தன் பெயரைப் பற்றிக் கவலைப் படாதபோது நாமும் இந்தப் பெயரை ஈசியாக எடுத்துக் கொள்ளவேண்டும்" என்று அவர் கூறிய போது  'what is in a name' என்பதை உண்மையென்று உணர்ந்தேன். எந்த விஷயத்தையும் நாம் நோக்கும் கோணம்தான் அதைப் பெரியதாகவோ அல்லது அற்பமானதாகவோ ஆக்குகிறது.

               சில வாரங்களாக சன் டீவியில் மீண்டும் 'சிவாஜி வாரம்' எம்ஜியார் வாரம்' என்று சினிமா வைக்கத் தொடங்கியுள்ளார்கள்.  எங்களுக்குக் குவைத்தில் வசதியாக இரவு 8.30 மணிக்கு வருவதாலும், என் மகளுக்கு விடுமுறையானபடியாலும் தினம் சினிமா பார்க்கிறோம்.  பழைய சினிமாக்களில் அம்மா பாசம், அண்ணா-தங்கை , அண்ணா-தம்பி உறவு பற்றி அதிகம் பேசப்பட்டதைக் கவனித்தேன்.  இப்பொழுதெல்லாம் சீரியலிலும் சினிமாவிலும் இளம் வயது காதல், அடுத்தவன் மனைவியைக் காதலிப்பது என்று வரையறை இல்லாமல் வருவதுதான் சமூகம் சீரழியக் காரணமோ என்று தோன்றியது.

              சமூகம் சீரழிவது இருக்கட்டும், உலகமே டிசம்பர் 21,2012-ல் அழியப் போகிறதென்று சொல்கிறார்களே. அதுவும் ஃப்ரான்சிலுள்ள  Pic de Bugarach என்ற இடத்தில் கூடியுள்ள மக்களை மட்டும் கடவுள் (aliens)அடுத்த உலகத்திற்க்குக் கூட்டிச் செல்வார் என்ற நம்பிக்கையில் பலர் அங்குக் கூட ஆரம்பித்துவிட்டார்களாம்.


அது என்ன அந்த இடத்தில் சிறப்பு என்று கேட்கிறீர்களா? பொதுவாக மலையில் உச்சியில் இருக்கும் கற்கள் மலை அடிவாரத்தில் இருக்கும் கற்களைவிட வயது (geological age) குறைவானதாக இருக்கும்.  இந்தக் குறிப்பிட்ட மலையில் மட்டும் மலை முகடு வயதில் அதிகமாகவும் அடிவாரம் குறைவானதாகவும் இருக்கும் அதிசயம் நிகழ்ந்திருப்பதாகவும் அது Nostradamusஅவர்கள் குறிப்பிலும் இருப்பதாகக் கூறுகிறார்கள். நித்யானந்தா, யாகவா முனிவர் போல சாமியார்களின் கேலிக் கூத்து இங்கு என்றால் இதைப்போல் மூட நம்பிக்கை ஐரோப்பிய மக்களுக்கு!!!.

              ஆனால் பூமியின் பல தட்டுக்கள் நேர்விசை அழுத்தத்துக்கு (horizontal pressure) ஆளாகும்போது நடுப்பகுதி உயர்ந்து மலையாகிறது.




 பூமியின் மேல் தட்டு உயர்ந்து மலை முகடாகிறது. அதனால் மலைமுகடு வயதில் குறைந்ததாகவும் மலை அடிவாரம் வயது முதிர்ந்ததாகவும் அமைகிறது.  சில சமயம் இத்தகைய அழுத்தம் ஏற்படும் இடத்தில் பிளவு(fault) இருந்தால் Pic de Bugarach மாதிரி உல்டாவாகவும் அமையும் என்று புவியியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள்.  இதைப் பற்றிய விளக்கத்தை hudsonvalleygeologist.blogspot.com என்ற ப்ளாகில் பார்க்கலாம்.
எது எப்படியோ Pic de Bugarach பார்ப்பதற்கு அழகான இடம் போலத்தான் தோன்றுகிறது!!! 2013-ல் (உலகம்) பிழைத்துக் கிடந்தால் போய்ப் பார்க்கலாம்!!!!!

Wednesday 7 March 2012

புரட்சிப் பெண்கள்


              ஹிந்து பேப்பரில் படித்த இரு பெண்மணிகளைப் பற்றிய செய்திகள் என்னை ரொம்பவே கவர்ந்தது.  என் மகளிடம் கூட அவர்களைப் பற்றிய செய்தியைச் சொல்லி இவர்களைப் போல் தைரியம், தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என்றேன்.

            முதலாமவர் சமீபத்தில் மறைந்த நடிகை எஸ்.என்.லக்ஷ்மி அவர்கள்.  ஹிண்டுவில் அவரைப் பற்றிப் படித்ததும் பிரமிப்பு அடங்கவில்லை.

 எம்ஜியாரின் பாக்தாத் திருடன்படத்தில் இவரே சிறுத்தையோடு சண்டை போட்டாராம். அசந்து போன எம்ஜியார் 'இந்தப் படத்தில் இவங்கதான் உண்மையான ஹீரோ' என்று பாராட்டினாராம். அந்த காலத்திலேயே தானே காரோட்டிக்கொண்டுதான் படப்பிடிப்புக்கு வருவாராம்.  இந்த போக்குவரத்து நெரிசல் மிகுந்த இந்தக் காலத்திலும் தானே காரோட்டுவாராம். சாய்சங்க பஜனைகள் போது பக்தர்களின் காலணியைவாங்கி அடுக்கும் சேவையும் செய்வாராம். தன்னுடன் பணிபுரிந்த பலரின் குழந்தைகளுக்குப் படிப்புச் செலவையும் ஏற்றுக் கொண்டிருக்கிறாராம். சுயசம்பாத்தியத்தில் வாழ்ந்தது, தைரியம் மிகுந்தவராக இருந்தது, சமூகத்திற்குத் தன்னால் முடிந்த தொண்டு செய்தது என்று நிறைவு தரும் வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார்.

          அடுத்தவர் Dr.T.S.கனகா அவர்கள்.

நியூரோ சர்ஜனாக வேண்டி போராட்டங்களைச் சந்தித்தாலும் மனம் தளராமல் போராடி வெற்றி பெற்றிருக்கிறார்.   பெண் என்ற காரணத்தால் அவருக்கு நியூரோ சர்ஜன் படிப்புக்கு வாய்ப்பு கிடைத்ததே பெரும்பாடானதாம். அவரை ஸர்ஜரி பக்கமே வரவிடாமல் பல ஆண் மருத்துவர்கள் தடுக்க, ஒரு நாள் ஒரு துணை மருத்துவர் வர இயலாத நிலையில்தான் முதன் முதலாக சர்ஜரி அறைக்கு அசிஸ்டெண்டாகப் போகும் வாய்ப்பு கிடைத்ததாம். விடாது போராடி முன்னேறியது மட்டுமில்லாமல் brain stimulation பற்றிப் பல ஆராய்ச்சி கட்டுரைகளும் எழுதியுள்ளாராம்.  இவையெல்லாம்விட வியப்படைய வைத்தது, 79 வயதானபோதும் தனது துறையில் முன்னேற்றங்கள் குறித்துப் பேச துருக்கி நாட்டுக்குப் போகப் போகிறாராம்.  அவரின் தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சிக்கு ஒரு சல்யூட்!http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/article2961929.ece