Monday 26 October 2009

இதனால் நான் சொல்வது யாதெனில்.......

என்னுடைய குடும்பத்தில் எல்லோருக்கும் எழுத்தார்வம், தமிழ்ப் பற்று உண்டு. என் பாட்டி (அப்பாவின் அம்மா) பேசினாலும் ஏசினாலும் கவிதை நடையில் கலக்குவார் (ஆதியிலே அலமேலு, பாதியிலே பாகீரதி..... என்று). என் அப்பாவும் கதைகள் எழுதியிருக்கிறார். அவருடைய கதைகள் இரண்டை அவரின் தமிழ் நடைக்காகவும் முத்து முத்தான கையெழுத்திற்காகவும் பொக்கிஷமாக வைத்திருக்கிறேன். என் அண்ணா இருவரும் சிறுவயதிலேயே கையெழுத்துப் பத்திரிகை நடத்தியவர்கள். என் சகோதரிகளும் கதை, கவிதை எழுதுவார்கள். இவர்களைப் பற்றி அறிந்ததாலும் அவர்களின் ஞானம் எனக்கும் உண்டு என்ற அஞானத்தினாலும் என் கணவர் என்னை எழுதச்சொல்லி வற்புறுத்திக்கொண்டே இருப்பார். அவர் தொடர்ந்து ஊக்குவித்ததாலும், தார்குச்சி போட்டுக்கொண்டே இருந்ததாலும் (சலித்துப்போய் குச்சியால் போட்டு விடுவாரோ என்ற பயத்தாலும்) இந்த ப்ளாக் எழுத ஆரம்பித்தேன். அதனால் இந்த ப்ளாக் படித்து திட்ட நினைப்பவர்கள் முதலில் மேற்சொன்ன அனைவரையும் திட்டிவிட்டு கடைசியாக என்னைத் திட்டவும்.

7 comments:

Anonymous said...

Hi Geethu,

good start. seems like you have more writing skill than we all have/had. pity you spent most of your time in formula writing! good luck.

Sriram

geetha santhanam said...

thanks sriram. geedhu

சாய்ராம் கோபாலன் said...
This comment has been removed by the author.
geetha santhanam said...

i will send it. i am happy to know ur interest and excitement about my dad (his story).---geedhu

சாய்ராம் கோபாலன் said...
This comment has been removed by the author.
அப்பாதுரை said...

meant compliment... see what i mean?

அப்பாதுரை said...

///She only said, most you might have got in to writing because of him !!///

that can't be a complement, could it?