Thursday 31 December 2009

happy new year

Wish this new year brings you

H ours of happy times with friends and family

A bundant wealth

P rosperity

P lenty of love when you need it the most

Y outhful excitement at life’s simple pleasures


N ights of restful slumber

E verything you need

W onderful world

Y ears and years of good health

E njoyment and mirth

A ngels to watch over you

R embrances of a happy years



(original இல்லை. எங்கோ சுட்டதுதான்)

Wednesday 23 December 2009

வாழிய செந்தமிழ்

                   பன்னீர் சோடா என்ற blog -ல் தமிழ் மொழி பற்றிய இந்த பதிவையும் (டமில் வால்க) அதன் பின்னூட்டங்களையும் படித்ததும் தமிழ் ஒன்றும் கற்றுக்கொள்ள அத்தனை கடினமானது இல்லை என்று சொல்ல தோன்றியது.


                  தமிழ் மொழியில் எழுத்துக்கள் அதிகமாம். ஏறக்குறைய அனைத்து மொழிகளிலுமே உயிர் மற்றும் மெய் எழுத்துக்கள் உண்டு என்று நினைக்கிறேன். ஒரு ஒப்பீட்டுக்காக ஆங்கிலத்தை எடுத்துக் கொள்வோம். Vowels எனப்படும் a,e,i,o,u உயிரெழுத்துக்கள், ஏனைய எழுத்துக்கள் மெய் எழுத்துக்கள் எனலாம். தமிழில் இவை தவிர உயிர்மெய் எழுத்துக்கள் 216 இருப்பது தான் பிரச்சினையா?.

                   பிற மொழிகளில் phonetics-ஐ வார்த்தைகள் கற்கும்போது கற்போம். தமிழில் அதற்கு ஒரு படி முன்னதாகவே எழுத்துக்கள் கற்கும்போதே (உயிர்மெய் எழுத்துக்களாக) கற்கிறோம், அவ்வளவுதான். உதாரணத்திற்கு, பி என்னும் உயிர்மெய் எழுத்து ப் மற்றும் இ இணைவதால் வருகிறது. ஆங்கிலத்திலும் பி என்ற ஒலிக்கு p மற்றும் i (vowel) என்ற எழுத்துக்களைப் பயன்படுத்துகிறோம். இந்த உயிர்மெய் எழுத்துக்களால் ஒரு வார்த்தை எழுத பயன்படுத்தும் எழுத்துக்கள் குறைகின்றன (அதாவது ஒவ்வொரு முறை எழுதும்போதும் பயன்படுத்தும் எழுத்துக்கள் எண்ணிக்கை கணிசமாகக் குறைகின்றது).

உதாரணம் : குறைவு , க்உர்ஐவ்உ



                மற்ற மொழிகளைக் கசடறக் கற்பதில் முதலில் அதிகமாக முனைய வேண்டும். ஒரு ஒப்பீட்டிற்காக ஆங்கிலத்தை எடுத்துக் கொள்வோம். எழுத்துக்கள் குறைவுதான். ஆனால் எழுத்து ஒலிவடிவத்திற்கும் வார்த்தைகளில் பயன்படுத்தும் ஒலிவடிவத்திற்கும் சம்பந்தமே கிடையாது. எழுத்துக்களை a (ஏ), e(இ), i(ஐ), o(ஓ), u(யு) என்று படிக்க கற்றுக்கொண்டு வார்த்தைகளில் வேறு ஒலிவடிவத்தில் பயன்படுத்துவோம்.

உதாரணம் : pat (a- ஒலிவடிவம் அ), pet (e-ஒலிவடிவம் எ), pit( i- ஒலி வடிவம் இ), pot (o-ஒலி வடிவம் ஆ), put (u-ஒலி வடிவம் உ), but (u-ஒலி வடிவம் அ). (என் மகள் U.K.G., படிக்கும்போது "யாரும்மா இப்படி தப்பு தப்பா மாத்தி மாத்தி வைச்சா?" என்று கேட்டாள்).

           இதுவே மூன்றிற்கு மேற்பட்ட எழுத்துக்களை உடைய வார்த்தைகளானால் முற்றிலும் வேறான விதிகள்.

உதாரணம்: base(a-ஒலி வடிவம் ஏ), band (a-ஒலி வடிவம் அ), ball(a- ஆ), bend(e- ஒலி வடிவம் எ), beat (e- ஒலி வடிவம் ஈ).



                இப்படி ஒவ்வொரு எழுத்தின் பயன்பாட்டு ஒலியைக் (phonetics) குழப்பாமல் கற்றுக் கொடுக்கவும், குழம்பாமல் கற்கவும் செலுத்தும் முனைப்பில் கால்பங்கு செலுத்தினால் போதும், தமிழில் ந, ன,ண மற்றும், ல,ள, ழ உச்சரிப்பின் வேறுபாட்டை (phonetics) எளிதாகக் கற்கலாம். இந்த எழுத்துக்களில் எதை நீக்குவது என ஆராய்வதைவிட, எதற்கு நீக்குவது எனக் கேட்கலாம்.

மனம் (உள்ளம்), மணம்(வாசனை)

பலம், பழம்

வால், வாள்

அரி, அறி

ஒரு சிறிய (எழுத்து மற்றும் உச்சரிப்பு) மாற்றம் எத்தனை பொருள் ( meaning) வேறுபாட்டை உணர்த்துகிறது.

                         இது போல் ஆங்கில இலக்கண விதிகளையும் ஆராயலாம். தமிழைப் பொறுத்தவரை நான், நீ, அவன் எல்லோரும் சமமே. ஆங்கிலத்தில் நானும், நீயும் சமம், ஆனால் அவன்(ள்) மட்டும் தனிமைப் படுத்தப் படுவார்.

'உதாரணம் : என்னிடம் புத்தகம் இருக்கிறது -- I have a book

உன்னிடம் புத்தகம் இருக்கிறது -- you have a book

அவனி(ளி)டம் புத்தகம் இருக்கிறது --- (s)he has a book.

அதே அந்த மூன்றாவது மனிதன் கும்பலாக (plural) வந்தால் என்னையும் உன்னையும் போல் நடத்துவார்கள்.

அவர்களிடம் புத்தகம் இருக்கிறது -- They have a book.

தமிழில் இந்த பாகுபாடெல்லாம் கிடையாது, எல்லோரும் சமம்.

                 அது மட்டுமா, capital letters, small letters, cursive writing என்று இருக்கும் 26 எழுத்துக்களை விதவிதமாக எழுதவேண்டி வருவதோடு,பெயர் வந்தால் முதலெழுத்து capital letter, வாக்கியத்தின் முதலெழுத்து capital letter என்று எத்தனை விதிகள்!!. தமிழில் இந்த தொந்தரவுகள் இல்லை. எழுத்துக்களை மட்டும் ஒழுங்காகக் கற்றுக் கொண்டால் போதும், கவலையின்றி மொழியில் பூந்து விளையாடலாம்.

                    தமிழில், பால் பாகுபாடு (gender) மனிதர்களுக்கு மட்டுமே உண்டு. பொருள்களுக்கு கிடையாது. இந்தி, French, German போன்ற மொழிகளில் மேசை, பேனா போன்ற பொருட்களைக் கூட பால் பாகுபடுத்தி கற்க வேண்டும். பொருட்களின் பாலுக்கேற்ப le telephone, la television (french) என்றோ, der garten, das jhar (german) என்றும் கூற எத்தனை நினைவு வைத்துக் கொள்ள வேண்டும்.

                           இத்தனை விஷயங்களை அலசிப் பார்க்கும்போது தமிழ் நிச்சயமாக செம்மொழிதான், பயன்பாட்டிற்கு எளிய மொழிதான் (USER FRIENDLY) என்று ஆணித்தரமாகக் கூறுவேன். தமிழில் ஆர்வமும், தமிழை அடுத்த தலைமுறைக்குக் கற்பிக்கும் விருப்பமும் ஒவ்வொரு தமிழனுக்கும் வருமானால், மூன்று தலைமுறை என்ன, நூறு தலைமுறை கடந்தும் தமிழ் வாழும்.

Thursday 17 December 2009

PANDORA'S BOX

                          நல்ல நேரத்தில் திரு.சந்திரசேகர ராவ் அவர்கள் தெலுங்கானா பிரச்சினையைக் கையில் எடுத்து உண்ணாவிரதம் இருந்தார், இப்பொழுது பாதி MLA,MP-கள் உண்ணாவிரதம் இருக்கிறார்கள். இந்த state-ஐ இரண்டாகப் பிரி, அந்த state-ஐ மூன்றாகப் பிரி என்று அவரவர்கள் மனம் போனபடி கேட்கிறார்கள்.  Mr. பாவம் பொதுஜனம்தான், ஊருக்குப் போக பஸ் இல்லாமல், வெளியே போக தைரியம் இல்லாமல் வீட்டிலேயே அடைபட்டு கிடக்கிறார். ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டமோ இல்லையோ, பொது மக்களுக்குத் திண்டாட்டம்தான்.


1. எங்கள் பகுதி முன்னேறவில்லை, அதனால் பிரித்துக் கொடுங்கள் என்பதற்கு பதில், இன்ன இன்ன விஷயங்கள் வேண்டும், இந்த project (IT யோ அல்லது வேறெதுவோ) இங்கே தொடங்கவேண்டும் என்று போராடிப் பெற்று முன்னற்றலாமே?

2. இத்தகைய sensitive-ஆன விஷயத்திற்கு CM-ஐக்கூடக் கலந்து ஆலோசிக்காமல் முடிவு செய்ய விழைந்த அரசியல் பெரிய  தலைகளுக்கு,

'எண்ணித் துணிக கருமம்; துணிந்த பின் எண்ணுவம் என்ப திழுக்கு' என்ற

வள்ளுவர் வாக்கை யாராவது நினைவு படுத்துங்கள்.

3.Canada-வில் ஒரு province- ஆன quebec-கிலும், தனி நாடு கோரிக்கை அவ்வப்போது வலுப்பெறும். Canadian Government மக்களிடம் வாக்கெடுப்பு நடத்திய பின்னரே பிரிக்கமுடியாதென்று முடிவு செய்தது. அதுபோல் இங்கேயும் செய்யலாமே!. ( " அப்பாடா, election முடிஞ்சுதுடா என்று பெருமூச்சு விடுமுன் இடைதேர்தல் வருகிறது, இதுல இது வேறயா" என்று தேர்தல் கமிஷன் கடுப்பாவது தெரிகிறது. ஜனநாயகத்தில் இதெல்லாம் சகஜமப்பா!!!)

Friday 11 December 2009

நவீன நவராத்திரி

                  சொர்க லோகத்தில் lesuirely-யாக லக்ஷ்மி, சரஸ்வதி மற்றும் பார்வதி மூவரும் பேசிக்கொண்டு இருந்தார்கள்.

லக்ஷ்மி: இந்த வருஷ நவராத்திரி கொலுவுக்கு பூலோகத்தில் எல்லாரும் ரெடி ஆகிண்டு இருக்காளே!

சரஸ்வதி: ஆமாம். ---- வீட்டில் கருட சேவை செட் வாங்கியிருக்காங்க. ----- வீட்டில் ப்ரதோஷம் செட் வாங்கியிருக்காங்களாம்.

பார்வதி: ----வீட்டில் கோவில் கடை வீதி model எல்லாம் பண்ணியிருக்காங்களாம்.

லக்ஷ்மி: இப்ப பூலோகத்தில் பக்தி ஜாஸ்தி ஆகிவிட்டதில்லையா?!!

பார்வதி: ஆமாமாம். கொலுவிற்கு அவர்கள் ரெடியாகும் ஜோரைப் பார்த்தால் எனக்கே அங்கு போய் பார்க்க வேண்டும் போல் இருக்கு.

சரஸ்வதி: நல்ல ஐடியா. எனக்கும் பூலோகத்தை சுற்றி வந்து நாளாகி விட்டதால் போகணும் போல் இருக்கு.

                       மூவரும் நவராத்திரிக்கு பூலோக விஜயம் செய்யலாம் என்று முடிவு செய்தனர். இதை பிரம்மா, விஷ்ணு, சிவனிடம் சொல்ல சென்றனர்.
"ஒன்பது நாள் நீங்க இங்க இருக்க மாட்டீங்களா" என்று சந்தோஷத்தோடு விஷ்ணு கேட்டார். உடனே பிரம்மா, " ரொம்ப சந்தோஷப்படாதே. 2012-ல் உலகம் அழியப் போகுதாம். ஏதோ சினிமால்லாம் வந்திருக்காம். ஊரெல்லாம் அதே பேச்சாக இருக்கு. நாம எதுக்கும் தயாரா இருப்போம். நானே எமர்ஜென்சி மீட்டிங் கூட்டலாமென்று நினைத்தேன். இவங்களும் பூலோகம் போறாங்க. நாம அந்த நேரத்தில் இது பற்றி மீட்டிங் போடலாம். " என்றார். பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் உலகம் அழியாமல் இருக்க என்ன செய்ய, அழிந்தால் என்ன செய்ய என்று விவாதிக்க முடிவு செய்தனர்.

                 தேவியர் மூவரும் பூலோகம் வந்தனர். நவராத்திரி ஒரு விடுமுறை நாளில் தொடங்கியதால் எல்லோர் வீட்டிலும் மெதுவாக பத்து பத்தரைக்கு எழுந்தனர். சோம்பலோடு காஃபியைக் குடித்துக்கொண்டே டி.வி பார்த்துக் கொண்டு இருந்தனர். ஒரு வீட்டிலாவது பூஜை, நிவேதனம் செய்வதற்கான அறிகுறியே இல்லை. சொர்க லோகத்திலிருந்து பூலோகம் வந்தபடியால் தேவியர் மூவருக்கும் பூலோகவாசிகளைப் போலவே பசிக்கத் தொடங்கியது. "ஆஹா, இந்த  பூலோகவாசிகள் கொலு வைத்த ஆர்பாட்டத்தப் பார்த்து இங்கு வந்து மாட்டிக் கொண்டோமே. என்ன செய்ய" என்று லக்ஷ்மியும் சரஸ்வதியும் சோர்ந்து போனார்கள். "கொஞ்சம் பொருத்துக் கொள்ளுங்கள்" என்று அவர்களை சமாதானப் படுத்தி தனது சக்தியில் இருவருக்கும் கொஞ்சம் கொடுத்து சமாளித்தார் பார்வதி. நல்ல வேளை, யாரோ ஒரு நல்லவர் வீட்டில் மூன்று தேவியரையும் மானசீகமாக அழைத்து சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்ததால் மூவருக்கும் பசி ஆறியது.

            மாலை வேளையில் மூன்று தேவியரும் நகரில் எல்லோர் வீட்டிற்கும் விஜயம் செய்வது என்று முடிவு செய்தனர். முதலில் ஒரு வீட்டிற்குச் சென்று வேடிக்கைப் பார்த்தனர்.

              வீட்டுத் தலைவரும், மகனும் டி.வியில் கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்பா மகனிடம் " நவராத்திரில இன்னைக்கு என்னடா ஸ்பெஷல்?" என்றார். " ---aunty வீட்டில் சுண்டல், தயிர் வடை, கேசரி. அப்புரம், ---- aunty வீட்டில் சேவை, பாதுஷா, டோக்ளா. பின்னர் ---aunty வீட்டில் சாப்பாடு. நேத்திக்கே அம்மா மெனுவெல்லாம் கேட்டாச்சு" என்றான். "சாப்பாட்டு ராமா" என்று சொல்லிக் கொண்டே வந்த அவரின் மகள் " அப்பா, நவராத்திரியில் ஒவ்வொரு நாளும் ஒரு கலர் டிரஸ் போட்டுக்கணுமாம். இன்னைக்கு எல்லாரும் ஸ்கை ப்ளூ. நாளைக்கு கிரீன். மறு நாள் ஆரஞ் கலர். எனக்கு ஆரஞ் கலரில் டிரஸ் இல்லை. நாளைக்கு வாங்கிண்டு வந்துவிடு" என்றாள். "என்ன இங்க discussion?" என்று கேட்டாள் அவரின் மனைவி ஸ்கைப்ளூ புடவையை சரி செய்தபடியே. "நவராத்திரிக்கு இன்றைய ஸ்பெஷல் என்ன என்று கேட்டேன். உன் மகளும், மகனும் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்" என்றார். " இன்னைக்கு நாலு வீட்டில் வெத்தல பாக்கு வாங்க போகணும். அப்புறம் ----- வீட்டில் பஜனை. கடைசியா ---- வீட்டில் கச்சேரி அண்டு டின்னர். சீக்கிரம் கிளம்புங்கள் டயமாச்சு" என்றார்.

"நான் 5 நிமிஷத்தில் ரெடியாகிவிடுவேன். நீ விளக்கு ஏத்துவதற்குள் நான் ரெடியாகி விடுவேன் " என்றார்.

" நம்மாத்தில் புதன் கிழமைதான் எல்லாரையும் கூப்பிட்டிருக்கேன். அன்னைக்கு ஏத்தினால் போதும். நீங்க கிளம்புங்கோ" என்றாள் மனைவி.

இந்த conversation-ஐக் கேட்டு முப்பெருந்தேவியருக்கும் மயக்கம் வராத குறைதான். அதிக எதிர்பார்ப்புடன் பூலோகம் வந்தோமே என்று நொந்து போனார்கள். இவர்களில் புத்திக்கு அதிபதியான் கலைவாணி மற்ற இருவரிடம், " இந்த ஒன்பது நாளில்தான் யாரும் நம்மை நினைக்க மாட்டார்கள் போலும். நாமும் நம் கணவர்களுக்கு உதவியாக disturbance இல்லாமல் 2012 crisis குறித்து தயாராக உதவுவோம்" என்றார்.

Wednesday 2 December 2009

wiiட்டேனா பார்

              என் மகள் புதிதாக ஒரு பொம்மையை வாங்கி தந்தால் ஒரு வாரம் அதை கீழேயே வைக்கமாட்டாள். எனக்கும் அவளுடைய நிலைதான் ஒரு வாரமாக!!.

                  சென்ற வாரம் wii வாங்கினோம். வாங்கியதிலிருந்தே ஒரே விளையாட்டுதான்.  wii ஒரு வகையான video game தான். இதில் நாமும் physical-ஆக involve ஆகி விளையாடலாம். அதன் செயல்முறையை simple-ஆகத் தமிழில் எழுத முடியாமல் தோற்றதால் wikipedia-விலிருந்து copy செய்திருக்கிறேன்.
       

     The game is a collection of five sports simulations, designed to demonstrate the motion-sensing capabilities of the Wii Remote to new players. The five sports included are tennis, baseball, bowling, golf, and boxing. Players use the Wii Remote to mimic actions performed in real life sports, such as swinging a tennis racket.
Tennis விளையாடினால் என்னவோ wimbledon tournament-ல் விளயாடுவது போல் பெருமிதம் வருகிறது.

              தனியாக exercise செய்வது பல நேரங்களில் monotonous ஆக இருப்பதால் சலித்து போகும். wii-ல் எப்பொழுதும் நம்மோடு நான்கைந்து பேர் screen-ல் தோன்றுவதால் ஜனரஞ்சகமாக இருக்கின்றது. 10 நிமிட jogging-ல் நாம் மலை, பீச், bridge எல்லாம் cross செய்வது போன்ற simulations, ஜாகிங் செய்வதை enjoyable exercise ஆக ஆக்குகிறது. நம்மை ஒருவர் முந்த முனையும்போது, 'விடக்கூடாது' என்று வேகமாக ஓட motivate செய்கிறது . யோகா, aerobics சொல்லித் தரவும் ஒரு ஆசிரியர் இருக்கிறார். சில கஷ்டமான யோகா செய்யும்போது யாரும் பார்க்கலையே என்று நைசாக காலை கீழே வைத்தால் "ஏய்! பார்த்துண்டே இருக்கேன்" என்று எச்சரிக்கிறார்.

              கஷ்டப்பட்டு exercise பண்ணி முடித்தால் கடைசியில் 'நீ இன்னைக்கு இவ்வளவு calories குறைத்திருக்கிறாய்' என்று கணக்கு போட்டு சொல்லிவிடுவது மட்டுமில்லாமல், 'ரொம்ப சந்தோஷப் படாதே. அது 4 strawberry அல்லது அரை டம்ளர் பால் குடிப்பதற்கு (மட்டுமே) ஈடானது' என்றும் சொல்லி மனசை உடைக்கும்.

              நிறைய மனிதர்களோடு விளையாடுவது, உடற்பயிற்சி செய்வது போன்ற திருப்தியை தருவதாலும், அவ்வப்பொழுது பாராட்டுக்களை வாரி வழங்குவதாலும் தனிமையில் வாழும் பல senior citizens -க்கு இது ஒரு சிறந்த companion என்பதில் ஐயமில்லை.