Thursday 17 June 2010

இப்படியும் ஒரு பரிசு

              கோடை விடுமுறைக்கு far east tour போகும் குஷியில் இருந்தாள் சித்ரா.  நாளை இரவு கிளம்பவேண்டும்.  பெட்டிகளில் துணிமணி மற்ற சாமான்களை அடுக்கி வைத்துக் கொண்டிருந்தாள்.  மகள் நேஹா உற்சாக மிகுதியில் கேள்விக் கணைகளைத் தொடுத்த வண்ணம் இருந்தாள்.  இந்த களேவரத்தைப் பற்றி கொஞ்சமும் கவலைப் படாமல் சித்ராவின் கணவன் சுரேஷ் டி.வி. பார்த்துக் கொண்டிருந்தான். " ஏங்க, நாளைக்கு ஊருக்குக் கிளம்பணும்.  நான் தனியா எல்லா வேலையும் செஞ்சிண்டிருக்கேன்.  நீங்க என்ன டிவி பார்த்துண்டிருக்கேளே. ஹெல்ப் பண்ணக் கூடாதா?" என்று கோவப்பட்டாள் சித்ரா.  "நீ பார்ப்பாயே. அதான் அந்த ஜாக்கெட் ப்ரொகிராம்.... சாரி, ஜாக்பாட் ப்ரொகிராம் வருதான்னுதான் பார்க்கிறேன்.." என்று சொன்ன வண்ணம் வந்த சுரேஷ் சித்ராவுக்கு உதவத் தொடங்கினான்.  மகளுக்கு கொஞ்சம் snacks, story books, coloring books என்று ஒவ்வொருவருக்கும் பார்த்து பார்த்து எடுத்து வைப்பதற்கு நள்ளிரவாகிவிட்டது.

             மறு நாள் எல்லோருக்கும் முன்பாக எழுந்த நேஹா அம்மாவையும் அப்பாவையும் ' ம், சீக்கிரம், ப்ளேனுக்குப் போகணும். எழுந்திருங்க..' என்று எழுப்பினாள்.  அத்தனை excitement அவளுக்கு.  ஒரு டிராவல் ஏஜென்சி மூலம் செல்வதால் வீட்டிலிருந்தே வேன் வைத்து கூட்டிக்கொண்டு விமான நிளையம் செல்வது முதல் எல்லாம் அவர்கள் பொறுப்பு.  இரவு ஏழு மணியளவில் வீட்டிலிருந்து கிளம்பினார்கள். விமான நிலையத்தில் இவர்களைப் போல டூர் வரும் நான்கைந்து குடும்பங்களின் அறிமுகம் கிட்டியது.
முதலில் பாங்காக் சென்று, பட்டாயா, கொரெல் ஐலேண்ட் பின்னர் மலேசியாவில் முக்கிய இடங்களான sunway lagoon park, genting island என்று  சுற்றிய களைப்பே தெரியாமல் enjoy பண்ணினார்கள்.  சிங்கப்பூரின் night safari, underwater world இவைதான் நேஹாவிற்கு மிகவும் பிடித்திருந்தன.  அவளுக்கு அந்த இடங்களைவிட்டுவர மனமே இல்லை.

               இப்படியாக 15 நாட்கள் சென்றதே தெரியாமல் ஊர் சுற்றினார்கள்.  அன்று சென்னை திரும்ப வேண்டும்.  புதிதாக கிடைத்த பிற நாட்டு நண்பர்களுக்கு பிரியாவிடை கொடுத்த பின்னர் சென்னை செல்லும் நண்பர்களுடன் விமான நிலையம் வந்து சேர்ந்தார்கள் சுரேஷ் குடும்பத்தினர்.  check-in செய்துவிட்டு வெளியில் வந்து காபி குடித்துக் கொண்டிருந்தனர்.  அப்போது வேகமாக வந்த ஒருவர் டூர் ஏஜென்சி சார்பில் அனைவருக்கும் ஒரு அழகாக gift wrap செய்யப்பட்ட ஒரு பரிசு பொருளைக் கொடுத்தார்.  "fragile item என்பதால் இதை இப்ப பிரிக்காதீங்க.  வீட்டில் போய் பாருங்கள். ஒரு surprise gift" என்று அன்புக் கட்டளை வேறு.  சித்ராவின் மகள் நேஹாவுக்கோ கிஃப்ட் என்றால் உடனே பிரித்தாக வேண்டும்.   சித்ராவுக்கோ மற்றவர்களெல்லாம் பிரிக்காதபோது நம் மட்டும் எப்படி பிரிப்பது என்ற தயக்கம்.  மேலும் அது ஏதாவது கண்ணாடிப் பொருளாக இருந்தால் பத்திரமாகக் கொண்டு போகவேண்டுமே; அதனால் பிரிக்கக்கூடாதென்று மகளை எப்படியோ சமாதானப்படுத்திக் கொண்டிருந்தாள்.  இதற்குள் போர்டிங் நேரம் ஆகிவிட்டதால் அனைவரும் அவரவர் கிஃப்டுடன் security scanning செய்யக் கிளம்பினர்.  Scanning முடிந்ததும் அங்கிருந்த அதிகாரி அனைவரிடமும் 'இந்த பரிசை gift wrap செய்தபடியே வைத்திருங்கள்.  பிரிக்க வேண்டாம்.  அப்பதான் customs-ல் பிரச்சினை எதுவும் இருக்காது" என்றார்.  நேஹாவுக்கோ என்னடா இது இந்த கிஃப்ட்டைப் பிரிக்கவிட மாட்டேங்கிறாங்களே என்று கோவம்.  ஆனால் 'customs பிரச்சினை' என்றதால் ஒருவருமே அதைப் பிரிக்காமல் வீடு சென்றபின் பிரித்துக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டனர்.  அசதியில் நன்கு தூங்கியவர்கள் சென்னை வந்ததும்தான் விழித்தனர்.

                சென்னை விமான நிலையத்தில் இவர்களை அழைத்துச் செல்ல டூர் ஏஜென்சியிலிருந்து இரண்டு பேர் வந்திருந்தனர்.  ஒருவர் கையில் இவர்களைப் போலவே wrap செய்யப்பட்ட gifts இருக்க சுரேஷுக்கு ஒரே ஆச்சர்யம். கேட்டதற்கு இங்கு சுற்றுலா வந்த வெளி நாட்டு வாடிக்கையாளர்களுக்குத் தரவே வைத்திருப்பதாகக் கூறினார்.  டூர் சிறப்பாக ஏற்பாடு செய்தது மட்டுமில்லாமல் ஒரு கிஃப்ட்டும் கொடுத்தது பற்றி அனைவருக்கும் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி (என்ன இருந்தாலும் ஓசியில் ஏதாவது கிடைத்தால் அதன் ஆனந்தமே தனிதானே!!).  இருவரும் சேர்ந்து அனைவரது லக்கேஜையும் எடுத்து வேனில் ஏற்றினார்கள்.

                 அந்த இரண்டாவது நபர் கிஃப்ட்டுக்களுடன் செல்ல எத்தனிக்கையில் விமான நிலையத்திலிருந்து போலீஸ் இருவர் வந்து அவரை இழுத்துக் கொண்டு போனார்கள்.  டூர் சென்றவர்கள் ஏறிய வேனையும் நிறுத்தி இரு போலீஸ்காரர்கள் காவலுக்கு நின்றனர்.  சித்ரா 'பிள்ளையாரப்பா, எந்த பிரச்சினையும் இல்லாமல் காப்பாத்து. உனக்கு கொழுக்கட்டை பண்ணுகிறேன்' என்று வேண்டிக் கொண்டாள்.  இவர்களின் எந்த கேள்விக்கும் போலீஸ்காரர் சொன்ன ஒரே பதில் 'பொறுத்திருந்து பாருங்கள்" என்பதே.  30-40 நிமிடங்களுக்குப் பிறகு விமான நிலையத்தினுள்ளிருந்து வந்த போலீஸ்காரர் ' sorry for the trouble. நீங்க போகலாம்" என்று சொன்னார்.  சுரேஷ் மற்றும் அந்த வேனிலிருந்த ஆண்கள் அனைவரும் இறங்கி 'என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள வேண்டுமென்று கொஞ்சம் கடுமையாகக் கேட்டதால்அந்த போலீஸ்காரர் சொல்லத் தொடங்கினார்.

               "உங்களுக்கு கிஃப்ட்டாகக் கொடுத்தார்களே, அது ஒரு மெழுகு பொம்மை.  அதில் வைரக் கற்களை ஒளித்து வைத்திருக்கிறார்கள். உங்களைப் போன்ற unsuspecting tourist கிட்ட கொடுத்து எடுத்து வந்து இங்கே வந்தவுடன் உங்களுக்குத் தெரியாமல் அந்த பாக்கெட்டை மாற்றிவிடுவார்கள்.  இதுதான் அவர்கள் modus operandi. இவர்களைப் பற்றி கண்டுபிடித்ததும் சிங்கப்பூர் போலீஸ் எங்களை அணுகினர்.  இங்கு சென்னையில் இவர்கள் கூட்டாளிகளைக் கையும் களவுமாகப் பிடிக்கவே இந்த கிஃப்ட்டை நீங்கள் பிரிக்கவேண்டாமென்று சிங்கப்பூர் விமான நிலையத்தில் கேட்டுக் கொண்டார்.  நீங்களும் அதன்படி நடந்ததால் எங்கள் வேலை எளிதானது.  அவன் அந்த கிஃப்ட் பாக்கட்டுகளை மாற்றும் வரையில் கண்காணித்துக் கொண்டிருந்த நாங்கள் உடனே வந்து அவனைக் கைது செய்தோம்.  உங்களிடம் உள்ள கிஃப்ட்டையும் சாட்சிக்காக எடுத்துக் கொள்ளவே உங்களைக் காக்க வைத்தோம்." என்றார்.

                "சே. பிரபலமான ஏஜென்சி என்று நம்பிதானே போனோம்.  இப்படி மோசம் செய்துவிட்டார்களே" என்று சுரேஷ் கேட்க," அவர்கள் மேல் தவறு இல்லை.   தங்கள் நிறுவனப் பொருட்களுக்கு இலவச விளம்பரம் பெறுவதற்கே இது போல் கிஃப்ட் கொடுப்பதாகக் கூறி டூர் ஏஜன்சியை அணுகியிருக்கிறார்கள்.  அவர்களுக்கும் இதனால் நன்மையிருப்பதால் டூர் ஏஜென்சி இதற்கு சம்மதித்திருக்கிறது.  அவ்வளவே அவர்களின் பங்கு" என்றார்.
அனைவரும் அதிர்ச்சியிலிருந்து விடுபடாமல் தங்களுக்குத் தரப்பட்ட கிஃப்ட்டை போலீசிடம் கொடுத்துவிட்டு வீடு நோக்கிப் போனார்கள்.

நீதி: ஓசிப் பொருளுக்கு ஆசைப் படாதீர்கள்.




Friday 11 June 2010

அபிராமி அந்தாதி

              அபிராம பட்டர் என்றழைக்கப்படும் திரு.சுப்பிரமணிய அய்யர் அவர்கள் திருக்கடவூரில் எழுந்தருளியிருக்கும் அன்னை அபிராமியின் அழகையும் அருளையும் பற்றி அனைவரும் மிகச் சுலபமாகப் புரிந்து கொள்ளும் வகையில் பக்தியோடு புனைந்தது அபிராமி அந்தாதி. நான் பள்ளி செல்லும் காலத்திலிருந்து காலையில் விழிக்கும்போதே கேட்டுப் பழகியது 'உதிக்கின்ற செங்கதிர்....' என்று பூபாள ராகத்தில் என் அம்மாவின் இழைந்த குரலில் ஒலிக்கும் அபிராமி அந்தாதி.  எங்கள் அம்மா பாடுவதைக் கேட்டே எங்கள் அனைவருக்கும் அறிமுகமாகி , மறக்க முடியா வண்ணம் நெஞ்சில் பதிந்து போன ஒன்று.   அந்தப் பாடல்களை மேலும் எளிமையான முறையில் விளக்கி எழுதும் பணியை திரு.அப்பாதுரை அவர்கள் துவங்கியிருக்கிறார்.

              திரு. அப்பாதுரை அவர்கள் பதிவுலக அன்பர்களுக்கு நன்கு அறிமுகமானவர்.  அவரின் தமிழறிவும் எழுதும் நடையும் அவரின் மூன்றாம் சுழி (http://moonramsuzhi.blogspot.com) வலைப்பூவைப் படிக்கும் அனைவரும் ரசிக்கும் ஒன்று. அவர் அபிராமி அந்தாதி பற்றி எழுதும் http://kadavur.blogspot.com என்ற வலைப்பூவிலிருந்து மாதிரிக்கு ஒரு முத்து:

அபிராமி பட்டர் என்று அழைக்கப்பட்ட சுப்ரமணிய அய்யர் அந்தாதி, பாடுவானேன்? பத்து நூறு செய்யுள் பாடியிருக்கலாமே? அல்லது லலிதா சக்ஸ்ரநாமம் போல் அபிராமி சகஸ்ரநாமம் சொல்லியிருக்கலாமே? அந்தாதி பாடுவானேன்? (லலிதா சக்ஸ்ரநாமத்திலிருந்து கொஞ்சம் எடுத்து அந்தாதியில் சேர்த்திருக்கிறார் - விளக்கம் எழுதும் பொழுது, நினைவிருந்தால் அதையும் எழுதுகிறேன்). சரி, அந்தாதி பாடிய காரணம்? 

அபிராமி அந்தாதியின் பின்னணியில் இருக்கும் கதை பலருக்கும் தெரியும். "இன்றைக்கு என்ன திதி?" என்று அரசன் கேட்ட போது, அமாவாசைக்குப் பதிலாகப் பௌர்ணமி என்று சொல்லிவிட்டார் சுப்ரமணிய அய்யர். 'இதென்ன கூத்து?! இந்த அய்யரை நம்பி மக்கள் தங்கள் கர்மாக்களை எப்படிச் செய்ய முடியும்? திதி கூடத் தெரியவில்லையே?' என்று எரிச்சலடைந்த அரசன், "அய்யரே, இன்றிரவு நிலவு தோன்றாவிட்டால் உனக்கு மரண தண்டனை" என்று ஆணையிட்டுக் கிளம்பிவிட்டார். அய்யர் என்னத்தைக் கண்டார்? அபிராமியைத் தான் கண்டார். அமாவாசையும் ஒன்று தான் பௌர்ணமியும் ஒன்று தான். அதாவது, ஆதியும் அந்தமும் ஒன்று தான். எல்லாமே அபிராமி தான். ஆதியும் அந்தமும் ஒன்றிலொன்று அடக்கம் என்று அவர் எண்ணியதாலும், அது ஆதி அந்தமில்லாத அபிராமிக்குள் அடக்கம் என்று நம்பியதாலும் அந்தாதி பாடினார். 

                அவர் அபிராமி அந்தாதி பற்றி எழுதும் இந்த வலைப் பூவில் என் அம்மாவின் குரலில் பாடல்களைக் கேட்டு பதிவிறக்கமும் செய்து கொள்ளலாம். தமிழ்,ஆன்மீகம் மற்றும் இசையில் ஈடுபாடுடைய அனைவருக்கும் இந்த வலைப்பூ பிடித்ததாக இருக்கும் என்பது என் கருத்து.

பசுமை நிறைந்த நினைவுகளே

               கோடைக் காலம் வந்துவிட்டது. பள்ளிக் காலங்களில் இந்த கோடை விடுமுறையை எத்தனை எதிர்பார்த்திருப்போம்!!!.  கோடை விடுமுறையில் என் சகோதர சகோதரிகள் மட்டுமில்லாமல் என் மாமாவின் குழந்தைகளும், சித்தியின் குழந்தைகளும் ஒன்றாகக் கூடி லூட்டி என்றால் அப்படி லூட்டி அடிப்போம்.  நாளொரு விளையாட்டும் பொழுதெல்லாம் சிரிப்பாகவும் போன காலங்கள் அவை.

                நாங்கள் அதிகம் ரசித்து விளையாடிய விளையாட்டுகளில் முதலிடம் வகிப்பது 904 என்ற சீட்டாட்டம்தான். இரண்டு டீமாகப் பிரிந்து ட்ரம்ப் வைத்து விளையாடும் ஆட்டம் அது.  என் அண்ணன் இருவரும் கையில் ஒன்றும் உருப்படியான சீட்டு இல்லையென்றாலும் 'சூப்பர், நாமதான் வின்' அப்படி இப்படியென்று பேசி எதிராளிக்கு பயத்தை உண்டு பண்ணுவார்கள்.  இதுகூடப் பரவாயில்லை. ட்ரம்பை மாற்றுவது போல் பாவனை செய்தே எதிராளிக்கு டென்ஷன் கொடுப்பார்கள்.  லுங்கியில் சில சீட்டுக்களை மறைத்து அழுகுணி ஆட்டம் ஆடுவார்கள்.  நிஜமாகவே கார்டை மறைக்கிறாங்களா இல்ல ஏமாத்தறாங்களா என்று கண்காணிப்பதிலேயே கவனம் செலுத்தி எங்கள் ஆட்டத்தைக் கோட்டை விடுவோம்.

              புளியங்கொட்டையை வைத்து 'ஒற்றையா, இரட்டையா' விளையாட்டு (நம் கைகளில் கொஞ்சம் கொட்டைகளை மூடி வைத்துக்கொண்டு நம் கையிலிருக்கும் கொட்டைகளின் எண்ணிக்கை odd or even number என்று எதிரிலிருப்பவர் ஊகிக்கவேண்டும்), கூழாங்கற்களை வைத்து அம்மானை ஆடுவது,  words building, 10-20 என்று ஒரு விளையாட்டு (இதைப் பலமுறை விளையாடியிருக்கிறோம்.  ஆனால் இப்பேது எப்படி விளையாடுவது என்று நினைவு இல்லை) என்று விளையாடுவது போதாதென்று நாட்டியம், நாடகம் எல்லாம் வேறு போடுவோம்.  என் மூத்த சகோதரி இதில் திறமை பெற்றவர்.  எங்களுக்கு அழகாக கதை சொல்லி நடிக்க, நாட்டியமாட எல்லாம் சொல்லிகொடுப்பார்.

            மாலை வேளைகளில் வீட்டிற்கு முன்பிருந்த பெரிய க்ரௌண்டில் நாலு கம்பம், help, பூப்பறிக்க வருகிறோம் (இந்த விளையாட்டெல்லாம் இப்போது குழந்தைகள் விளையாடுகிறார்களா என்று தெரியவில்லை), கோ-கோ என்று ஓடி விளையாடிக் களைத்தபின்தான் வீடு திரும்புவோம்.

          மத்தியான வேளையில் நாங்களும் எங்கள் தெரு பிள்ளைகளும் எங்கள் வீட்டில் கூடி 'மலையாள பகவதி' என்று ஒரு விளையாட்டு விளையாடுவோம்.  எல்லா கதவு, ஜன்னல்களையும் மூடி வீட்டை இருட்டாக்கிவிட்டு படுப்பது போல் பாவனை செய்திருக்க ஒருவர் மட்டும் கறுப்பு போர்வையைப் போர்த்திக் கொண்டு மற்றவர்களைப் பயமுறுத்த வேண்டும்.  அந்த ஒருவரின் கற்பனை திறனையும், நடிப்புத் திறனையும் பொறுத்து விளையாட்டின் சுவை கூடும்.  ஒரு நாள் இப்படி விளையாடிக் கொண்டிருக்கும்போது வீட்டு வாசல் கதவை யாரோ பலமாகத் தட்டும் ஓசை.  என் மூத்த சகோதரி ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தால் ஒருவரையும் காணோம்.  கொஞ்ச நேர அமைதிக்குப் பிறகு மீண்டும் தட தட என்று தட்டும் சத்தம்.  மீண்டும் ஜன்னல் வழியே பார்த்தால் ஒருவரும் இல்லை.  இப்போது எங்களுக்கெல்லாம் கொஞ்சம் பயம் எட்டிப் பார்த்தது (விளையாட்டின் effect!!!). இப்படியே மூன்று நான்கு முறை; அதுவும் ஒவ்வொரு முறையும் சத்தம் கூடிக் கொண்டே போனது; ஜன்னல் வழியே பார்த்தால் ஒருவரும் தென்படவில்லை.  எங்களுக்கோ கதவைத் திறக்க பயம்.  அடுத்த முறை கதவைத் தட்டும் ஓசை வந்ததும் என் சகோதரி பக்கத்து அறையின் ஜன்னல் வழியே பார்த்தால்....... அது என் மாமாதான்.  எங்களைப் பயமுறுத்தவே அப்படி செய்திருக்கிறார்.  பயம் தெளிந்து அனைவரும் வயிறு வலிக்கச் சிரித்தோம்.

            இப்படி ஒவ்வொரு கோடைவிடுமுறையும் கொண்டாட்டம்தான்.  அந்த நாட்களை இன்று நினைத்தாலும் இன்பமாக இருக்கிறது.   நான் இத்தனை வரிகளில் சொன்னதை நான்கே வரிகளில் சொல்லும் ஒரு பழைய பாடல்தான் நினைவுவருகிறது.

              'குரங்குகள் போலே மரங்களின் மேலே தாவித் திரிந்தோமே
               குயில்களைப் போலே இரவும் பகலும் கூவித் திரிந்தோமே
               வரவில்லாமல் செலவுகள் செய்து மகிழ்ந்திருந்தோமே
              வாழ்க்கைத் துன்பம் அறிந்திடாமல் வாழ்ந்து வந்தோமே!!'


எவ்வளவு உண்மையான வரிகள்.  கவியரசுக்கு இணை அவர் மட்டும்தான்!!!.


Sunday 6 June 2010

'சின்ன' விஷயம்





             2011-ல் நான் என்று தலைவர்கள் கனவு கண்டுகொண்டு இருக்க ஸ்ரீமான் பொதுஜனம் மனதில் அனைவரைப் பற்றியும் என்ன ஓடிக் கொண்டிருக்கும் என்று ஒரு கற்பனை:




வாடிப் போனாமாதிரி இருக்கே! 

      
சூரியனைச் சுத்தி கோளெல்லாம் அதனதன் ரூட்ல போயிண்டிருக்கா மாதிரி தெரிஞ்சாலும் எப்ப எல்லாம் முட்டி மோதிக்குமோ தெரியலையே!!









இது எப்ப எந்த கூடையில் இருக்கும்னு தெரியாது.  














யாராவது சுத்தி விடலைன்னா இது சுத்தாது!











குளமே வத்திப் போச்சு; பூவை எங்க தேடறது!!





 stop சண்டை போடாதீங்க சொல்வதுபோல் சின்னத்தை வைச்சிண்டு சின்னப்புள்ளத்தனமா சண்டை போடறாங்களே!







சத்தம் பெரிசாத்தான் இருக்கு.  வேலைக்காகுமா தெரியலையே






ரஜினிகாந்த் ரசிகர்கள் : 'உடைந்து போன நெஞ்சை ஒட்ட வைக்க அவர் வருவாரா?'







மக்கள்: 'இருக்கும் கட்சி விட்டு இல்லாத ஒன்றை தேடி எங்கெங்கோ அலைகின்றார் ஞானத் தங்கமே'







Thursday 3 June 2010

என்னவோ நடக்குது மர்மமாயிருக்குது

Dubai flight was just 2 minutes from crashing into sea
Posted on 6/2/2010
It was disaster averted by less than two minutes.

Initial investigations have revealed that the May 26 Air India Express Dubai-Pune flight IX-212 was less than two minutes away from plunging into the Arabian Sea. It had plummeted dangerously from an altitude of 37,000 feet when its commander was away from the cockpit, in the washroom, leaving the first officer to man the controls. The aircraft's nose was down to a minus-23-degree angle because of which its descent rate increased rapidly and went up to 21,000 feet per minute even as the overspeed warning blared loudly in the cockpit.

That was the scene the commander walked into after his loo break. A few minutes before that, the Boeing 737 had entered Indian air space and was cruising over the Arabian Sea. The airplane was on autopilot at 37,000 feet when the commander handed it over to the first officer and walked out closing the cockpit door behind him. According to sources, the commander realized something was wrong when he returned from the washroom and did not get any response after he pressed the cockpit's door-unlock button (it sets off a chime inside the cockpit and the pilot sitting inside responds by pushing a button which opens the door). By this time the commander also realized that the aircraft was at an unusual pitch attitude (a pitching movement is nose up-nose down motion of an aircraft and a nose-down pitch increases air speed). Sensing danger, the commander punched in the emergency code, which opens the cockpit door, but only after 35 seconds.

"On entering the cockpit, he was shocked when he saw the Primary Flight Display, which displays information on altitude, vertical speed (in this case rate of descent) and the air speed. It showed the aircraft's nose was down by minus 23 degrees, due to which it was flying at 0.88 Mach," said the source. Mach One is the speed of sound and therefore 0.88 Mach is 88% the speed of sound, which was well beyond the operating limit speed of most passenger aircraft. The loud aural alarm or the clacker, in aviation parlance, which blares continuously giving an overspeed warning was on. "Such a high speed could lead to structural failure of the aircraft and to recover from such a situation safely requires exceptional pilot skills," he said adding that the commander appeared to have displayed remarkable skill in following the textbook "jet upset recovery procedure".

The incident puts a huge question mark on the training given by Air India Express, especially to its first officers. The first officer had 1,000 hours of flying experience on the Boeing 737 aircraft which, say aviation safety experts, is quite adequate to handle a situation like this.

The Directorate-General of Civil Aviation (DGCA) is investigating the incident. "The aircraft plunged at speeds beyond its maximum limit. The recovery would have stressed the structure abnormal This would require special investigations to be carried out on the aircraft after landing," said an air safety expert. It was not known whether the aircraft was grounded following this incident. 
news taken from http://www.indiansinkuwait.com/ShowArticle.aspx?ID=5694&SECTION=0

Tuesday 1 June 2010

மாம்பழமாம் மாம்பழம்






(படம்: இணையத்திலிருந்து சுட்டது; 
கருத்து: சொந்தமாகச் சுட்டது)