Saturday 8 May 2010

அந்த நாள் ஞாபகம் - 3

              "Uncle, uncle!!" என்று யாரோ தன்னை உலுக்கியதால் மெதுவாகக் கண் விழித்தார் நேதன்.  கார் கதவு திறந்திருக்க, steering wheel மேல் கவிழ்ந்த நிலையிலிருந்த நேதன் சுதாரித்து எழுந்தார். எதிரில் நின்ற வினோதைக் குழப்பத்துடன் பார்த்தார்.  இதற்குள் அங்கு வந்துவிட்ட போலிஸிடம் நேதன் தனக்குத் தெரிந்தவர் என்றும் அவரைத் தன் காரில் கவனமாக அழைத்துச் செல்வதாகவும் கூறி அனுப்பி வைத்தான் வினோத்.  நேதனுடையக் காரைப் பூட்டிவிட்டு அவரைத் தன் காரில் வலுக்கட்டாயமாக ஏற்றிக் கொண்டு கிளம்பினான்.

              " Uncle, நான் உங்களுக்கு எந்த தீங்கும் செய்யமாட்டேன். கவலைப் படாதீங்க.  உங்க காரை என் வீட்டிற்கு எடுத்து வர towing company-க்குச் சொல்லிவிட்டேன்.  இன்னக்கு என்னோட தங்கி நாளைக் காலை டொரோண்டோ போங்க." என்றான் வினோத். "உங்க காரில் பாம் எல்லாம் வைக்கலை.  ஒரு சின்ன அதிர்ச்சி வைத்தியம் , அவ்வளவுதான்!  நீங்க shock- லேர்ந்து இன்னும் சரியாகலை. Tim Hortons-ல் ஒரு காஃபி வாங்கிக் கொண்டு பேசியபடியே வீட்டுக்கு போவோம். that should make you feel better" என்று மேலும் தொடர்ந்தான் வினோத்.

               "Uncle, உங்களுக்குத் தெரியுமே, எனக்குச் சின்ன வயசிலேயே கார் என்றால் பயம்.  பேச்சு வந்தவுடன் ஸ்வேதா, ஸ்வேதா என்றுதான் அதிகம் சொல்வேனாம்.  என் அப்பா அம்மா கூட அது யருடா உன்னோட
girl friend- ஆ என்று கேலி செய்வார்களாம். பத்தாவது படிக்கும்போது ஒரு கார் விபத்தைப் பார்க்கும்போது எனக்கு என் முன்பிறவி நினைவுகள் தெளிவாகத் தெரிந்தது.  என்னை ஒரு பாவி அநியாயமாக் கொன்னு என் குடும்பத்திலிருந்து பிரித்துவிட்டானே என்று கோவத்தில் குமுறினேன்.  ஒருமுறை என் குடும்பத்தினருடன் மதுரை செல்லும்போது அம்மாவுக்குத் தெரியாமல் முன் பிறவியில் நான் இருந்த வீட்டிற்குப் போய்ப் பார்த்தேன்.  என் மனைவியும் மகள் ஸ்வேதாவும் நான் இல்லாமல் வாழப் பழகியிருந்தனர்.  மகள் வேலைக்குப் போகத் தொடங்கியிருந்தாள். நான் எப்படி என்னை அறிமுகப் படுத்திக் கொள்வது என்று புரியவில்லை.  இனி அந்தக் குடும்பத்தில் எந்த விதத்திலும் என்னை இணைத்துக் கொள்வது இயலாது என்று புரிந்தது.  ஒரே குழப்பமாக இருந்தது".

              "பின்னர் படிப்பில் கவனத்தை முழுமையாகத் திருப்பினாலும் அப்பப்ப என் முன்பிறவி நினைவுகள் என்னைக் குழப்பிக் கொண்டே இருந்தன.  பள்ளிப் படிப்பு முடிந்ததும் என் பெற்றோர் என்னை வெளி நாட்டுக்கு அனுப்பிப் படிக்கவைக்க முடிவு செய்தனர். எல்லோரும் U.S. போக அறிவுரை சொல்ல என் மனதில் ஒரு குரல் என்னை Canada செல்ல உந்தியது.  என் பெற்றோரும்  U.S-ல் நடந்த துப்பாக்கி ஷூட்டிங்கெல்லாம் கேள்விப் பட்டு கனடாவே நல்லது என்று முடிவு செய்தனர்."

               "இங்கு வந்த ஒரு வருடத்திலேயே உங்களைப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.  வினோதோடு உங்களைப் பார்த்ததும் முதலில் ஆச்சர்யமாக இருந்தது. சென்ற பிறவியில் என் ஆசை மகளையும் மனைவியையும் பிரியக் காரணமானவன் என்பதால் கோவமும் வெறுப்பும் வந்தது.  கடைசியில் உங்களைப் பழிவாங்க ஒரு வாய்ப்பு கிடைத்ததை எண்ணி திருப்தியும் வந்தது.  அந்த எண்ணத்தோடே வினோதிடமும் உங்களிடமும் நெருங்கிப் பழக ஆரம்பித்தேன்.  உங்களோடுப் பழகப் பழக உங்களின் நல்ல குணம் என் எண்ணத்தை மாற்றியது.  மேலும் உங்களைக் கொல்வதால் நான் achieve செய்யப் போவது என்ன? முன் பிறவியில் என் மகளான ஸ்வேதாவுக்கோ என் மனைவிக்கோ இது தெரியக் கூட வாய்ப்பு இல்லை.  மேலும் அவர்கள் என்னை அவர்கள் குடும்பத்தில் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?  இந்தப் பிறவியில் என் பெற்றோர் என்மீது மிக அன்பு வைத்திருக்கிறார்கள்.  அவர்களுக்கு இந்த அதிர்ச்சியைக் கொடுக்கத் தைரியமில்லை.  உங்களைக் கொன்று வினோதையும் aunty-யையும் அனாதையாக்குவதால் என்ன பயன்?  உங்கள் தவறுக்கு அவர்களுக்குத் தண்டனை அளிப்பது எப்படி நியாயம்?  இப்படி பல கேள்விகள் என்னைக் குழப்பின.  chemical engineering புத்தகங்களைவிட psycology புத்தகங்களைத்தான் நான் அதிகம் படித்திருக்கிறேன்.  ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு உங்களுக்கு ஒரு அதிர்ச்சி வைத்தியம் தருவது என்று முடிவு செய்தேன்.  அதுதான் இந்த நாடகம். வேறு யாருக்கும் அடிபடக்கூடாது என்று நீங்கள் signal-க்கு முன்னாலேயே நிறுத்துவீர்களென்று எதிர்பார்த்தேன். அது போலவே செய்தீர்கள்.  எப்படியும் உங்களை இங்கு பிடித்துவிடலாம் என்று நினைத்து உங்களை rental car-ல் பின் தொடர்ந்து வந்தேன்" என்றான்.

               " இந்த அதிர்ச்சியில் நான் heart attack வந்து செத்திருந்தால் என்ன செய்திருப்பாய்?" என்றார் நேதன்.  சில நிமிட யோசனைகளுக்குப் பிற்கு, "அது நிச்சயமாக நான் கொடுக்க நினைத்த தண்டனை அல்ல.  அப்படி நடந்திருந்தால் அது கடவுள் உங்களுக்குக் கொடுத்த தண்டனை.  அதற்கு நான் பொறுப்பு அல்ல"  என்றான் வினோத்.  சில நிமிட அமைதிக்குப் பிறகு "anyway vinaodh, உனக்கு நன்றி.  இந்த விஷயத்தை யாரிடமும் சொல்ல முடியாமல் மன அழுத்தத்தில் ஒரு நாள் heart attack வந்துவிடும் என்று நினைப்பேன்.  இப்பொழுது எனக்கு மனம் லேசாகிவிட்டது. may be இதுகூட நீ எனக்குக் கொடுத்த psycological treatment என்று நினைக்கத் தோன்றுகிறது.  அது சரி, அந்த பேகில் ஏதோ wrap செய்து வைத்திருந்த்தே.  அதில் என்னதான் இருக்கு?  என்றார் நேதன். "  இன்று இரவே உங்கள் கார் வ்ந்துவிடுமில்லையா, நீங்களே பாருங்கள்" என்றான் வினோத் புன்னகையுடன்.  அன்று இரவு நேதனும் வினோதும் வெகு நேரம் பேசிக்கொண்டிருந்தனர். 12 மணியளவில் நேதன் காரும் வந்துவிட்டது.  ஆவலுடன் அந்தப் பையைப் பிரித்தார்.  அதில் goldplated முருகன் 'யாமிருக்கப் பயமேன்?' என்று சிரித்துக் கொண்டிருந்தார்!!!!.


9 comments:

ஸ்ரீராம். said...

சுவாரஸ்யமான கற்பனைதான். இந்த மறுபிறவி சமாச்சாரம் ஒரு குழப்பமான சமாச்சாரம்.

அப்பாதுரை said...

வித்தியாசமான தொடக்கம்; (ஞானப்)பழமான முடிவா?

சாய்ராம் கோபாலன் said...

//Tim Hortons-ல் ஒரு காஃபி வாங்கிக் கொண்டு//

I am used to Starbucks coffee most of the time. Was in Detroit this Friday and enjoyed a coffee for the first time from Tim Hortons. Refreshing one for sure

geetha santhanam said...

sriram, thanks.
durai, its my first attempt. pazham puliththadhaa?!!
sairam,in my opinion tim hortons coffee is far better than starbucks in taste, flavour etc.---geetha

meenakshi said...

கதை நல்லா இருக்கு. முதல் முயற்சின்னு சொல்ல முடியாத அளவுக்கு எழுதி இருக்கும் விதம் அருமை. பாராட்டுக்கள். கதை ஆரம்பத்துலேந்தே ரொம்ப வித்யாசமா இருந்ததால முடிவும் ரொம்பவே வித்யாசமா இருக்கும்னு எதிர் பார்த்தேன்.
முருகர் உங்களுக்கு ரொம்ப பிடிச்ச கடவுளா? நீங்க எழுதின ரெண்டு கதைலேயும் அவர் இருக்காரே!

அப்பாதுரை said...

it is a good story - well written. i could not connect with the murugapazham, that is all!

geetha santhanam said...

thanks durai and meenakshi---geetha

எல் கே said...

sorry for late comment. i was out of station. u have made a rocking start . keep writing

geetha santhanam said...

thanks Mr. LK for your encouragement--geetha