Showing posts with label politics. Show all posts
Showing posts with label politics. Show all posts

Sunday, 28 November 2010

அதிகமில்லை ஜெண்டில்மேன்!

               இரண்டு நாட்களுக்கு முன் தினமலரில்(26.11.2010) மழை வெள்ளத்தில் நீந்தி பள்ளி செல்லும் சிறார்களைப் பற்றிய செய்தி படித்ததும் மிகவும் வருத்தமாக இருந்தது.


அரசியல்வாதிகள் கோடி கோடியாக மத்தியிலும் மாநிலத்திலும் கொள்ளையடித்த பணத்தில் கொஞ்சம் செலவழித்து இந்த மலைவாழ் மக்களுக்கு நல்ல பள்ளியோ, இந்த ஆற்றைக் கடந்து போக ஒரு பாலமோ கட்டிக் கொடுத்திருக்கலாம்.

              இல்லை துணை இல்லாவிட்டாலும் துணிவு இழக்காத இந்தப் பெண்கள் (நன்றி: இந்த வார ஆனந்த விகடன்) போல





 பலருக்கு குறைந்தபட்ச தேவைகளை நிறைவேற்றியிருக்கலாம்.

              இவர்களின் தேவையை நிறைவேற்ற தேவை, "அதிகமில்லை ஜெண்டில்மேன்! (உங்கள் கொள்ளையில்) ஒரு துளி போதுமே."

Wednesday, 17 November 2010

(ஃ)போகஸ் செய்திகள்

JPC- யில் சேரத் தயக்கம்

பல கோடி ரூபாய் ஊழலுக்காக JPC அமைக்க வேண்டும் என்று பார்லிமெண்டில் பெருங்கூச்சல் எழுப்பினார்கள் எம்பிக்கள்.  ஆனாலும் 1.75 lakh crores-க்கு எத்தனை சைபர் என்ற குழப்பத்தின் காரணமாக அந்தக் குழுவில் இடம் பெற அரசியல் தலைவர்கள் தயக்கம் காட்டி வருவதாகச் செய்திக் குறிப்பு கூறுகிறது.

சேரும் ஷேரும்.

'சேர் (chair) என்பது தோளில் தொங்கும் துண்டைப் போன்றது; ஷேர்(share) என்பது இடுப்பில் கட்டிய வேட்டி போன்றது. அதனால் கண்மணிகளே, சேர் போனாலும் ஷேர் இருப்பதால் கவலை வேண்டாம்' என்று தலைவர் அறிக்கையில் கூறியுள்ளார்.

எடியூரப்பா பெயர்  மாற்றம்.

எடியூரப்பா என்ற பெயர் சமயத்தில் இடையூரப்பா என்று ஒலிப்பதால்தான் அடுத்தடுத்து இடையூறாக வருவதாகத் தன் குடும்ப ஜோசியர் கூறியதால் அவரின் ஆலோசனைப்படி எடியூரப்பா தனது பெயரை உடையூரப்பா என்று மாற்றிக் கொள்ளப் போவதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் சொல்கிறார்கள்.

CBI அதிகாரிகள் ஒட்டுமொத்த ராஜினாமா

காமன்வெல்த் கேம்ஸ், ஆதர்ஷ் ஊழல், ஸ்பெக்ட்ரம் ஊழல் என்று இடைவிடாமல் அரசியல்வாதிகள் ஊழல் செய்வதோடு எதற்கெடுத்தாலும் CBI விசாரணைக்கு உத்தரவிடுவதால் வேலைப் பளு தாங்காமல் தாங்கள் அனைவரும் ஒருமித்த கருத்தோடு ராஜினாமா செய்யப் போவதாக CBI அதிகாரிகள் மிரட்டல்.

ஓரவஞ்சனை - ஓபாமாவின் புலம்பல்

அடுத்தடுத்து கோடிக் கணக்கில் ஊழல் புரியும் இந்திய அரசியல்வாதிகள் தனது இந்தியப் பயணத்தின் போது வெறும் நடனமாட மட்டும் கற்றுக் கொடுத்துவிட்டு ஊழல் பற்றிய பாடங்களைக் கற்றுக் கொடுக்காமல் விட்டது பெரும் ஓர வஞ்சனை என்று அமெரிக்க அதிபர் ஓபாமா வன்மையாகக் கண்டித்தார்.

சினிமா தியேட்டரில் ஈ ஓட்டினார்கள்

இந்திய அரசியல்வாதிகளின் ஊழல் திறமை பற்றிய விவரம் விறுவிறுப்பாகவும் அவர்களின் உரைகள் சரியான காமெடி பீஸாகவும் இருப்பதால் தொலைக்காட்சி செய்திகள் பார்ப்பதிலேயே மக்கள் ஆர்வம் காட்டுவதால் பெரும்பான்மையான திரையரங்குகளில் கூட்டமே இல்லை என்று தெரிய வருகிறது.